இரட்டை சதமடிப்பதை விட இந்தியாவுக்காக அதை செய்ய முயற்சிப்பேன் - ஜெய்ஸ்வால் பேட்டி


இரட்டை சதமடிப்பதை விட  இந்தியாவுக்காக அதை செய்ய முயற்சிப்பேன் - ஜெய்ஸ்வால் பேட்டி
x

image courtesy; twitter/@ICC

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 179 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக இளம் நட்சத்திர வீரர் 179 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

இந்நிலையில் 2வது நாள் ஆட்டத்தில் இரட்டை சதமடிப்பதை விட கடைசி விக்கெட் வரை நின்று இந்தியாவுக்காக முடிந்தளவுக்கு பெரிய ரன்கள் குவிக்க முயற்சிக்க உள்ளதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது குறித்து முதல் நாள் முடிவில் அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

"நான் ஒவ்வொரு செஷனாக விளையாட விரும்பினேன். ஆரம்பத்தில் சுழல், பவுன்ஸ், வேகம் ஆகியவற்றிற்கு சாதகமாக பிட்ச் இருந்தது. அதில் நான் சுமாரான பந்துகளை அடித்து கடைசி வரை விளையாட முயற்சித்தேன். இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன். குறிப்பாக தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன். காலையில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்த பிட்ச் பின்னர் செட்டிலானது. இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ராகுல் மற்றும் ரோகித் பாய் எனக்கு கொடுத்துள்ளனர்" என்று கூறினார்.


Next Story