ஐ.பி.எல். 2024: பயிற்சியை தொடங்கிய 'தல' தோனி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்


ஐ.பி.எல். 2024: பயிற்சியை தொடங்கிய தல தோனி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்
x

image courtesy: AFP

இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சென்னை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 5-ம் தேதி சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனான தோனி பங்கேற்று பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தோனி, தனது கைகளில் இரண்டு பேட்களுடன் சி.எஸ்.கே. அணியின் பயிற்சி ஜெர்சியை அணிந்தபடி மைதானத்திற்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.


Next Story