கடைசி ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு


கடைசி ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு
x

Image Courtesy: AFP 

இந்தியா - இலங்கை இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடக்கிறது.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்களின் முடிவில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டி டை ஆனது. 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடக்கிறது.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story