இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்...'பெரும் ஏமாற்றம்' பாகிஸ்தான் பேட்டிங்கை விமர்சித்த முன்னாள் வீரர்...!


இந்தியாவுக்கு எதிரான ஆட்டம்...பெரும் ஏமாற்றம் பாகிஸ்தான் பேட்டிங்கை  விமர்சித்த முன்னாள் வீரர்...!
x

Image Courtesy: AFP

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம் மற்றும் அப்துல்லா ஆகியோர் களம் இறங்கினர். இதில் 20 ரன் எடுத்த நிலையில் அப்துல்லா அவுட் ஆனார்.

இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் இமாமுடன் ஜோடி சேர்ந்தார். இதில் இமாம் 36 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ரிஸ்வான் பாபர் ஆசமுடன் இணைந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் ஆசம் அரைசதம் அடித்த நிலையில் 50 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து களம் இறங்கிய சகீல் 6 ரன், இப்டிகார் அகமது 4 ரன், ஷதாப் கான் 2 ரன், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ரிஸ்வான் 49 ரன் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்த தொடர் விக்கெட் வீழ்ச்சியின் காரணமாக பாகிஸ்தான் அணி தடுமாறியது. இதையடுத்து நவாஸ் மற்றும் ஹசன் அலி ஜோடி சேர்ந்தனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 155 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 7 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ஒரு சிறந்த பேட்டிங் விக்கெட்டில் வாய்ப்பை வீணடித்துள்ளனர். ஏமாற்றம். மிகவும் ஏமாற்றம். என பதிவிட்டுள்ளார்.



Next Story