சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வீரர் ஓய்வு!


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி வீரர் ஓய்வு!
x

image courtesy; AFP

2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம் இடம்பெற்றிருந்தார்.

லாகூர்,

பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் இமாத் வாசிம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதான அவர், கடைசியாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடினார். அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இமாத் வாசிம், 2015ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமானார். பின் அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக ஒருநாள் போட்டிக்கான அணியிலும் தேர்வானார். பல ஆண்டுகளாக, 50 மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பான ஆல் ரவுண்டராக வலம் வந்தார். 2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தார். மேலும் சில ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார்.

அதன்பின் சமீப காலமாக அணியில் இடம் கிடைக்காமல் போராடினார். எனவே தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளூர் லீக் தொடர்களில் விளையாடுவதை தொடர உள்ளார்.

இது குறித்து அவர் ,"என்னை எப்போதும் ஆதரித்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நன்றி. நான் சாதிக்க உதவிய எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இறுதி நன்றி. சர்வதேச அரங்கில் இருந்து விலகி எனது விளையாட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் கவனம் செலுத்த நான் இப்போது காத்திருக்கிறேன்"என்று கூறினார்.


Next Story