தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா...? - ஆஷஸ் 4வது டெஸ்ட் நாளை தொடக்கம்..!


தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா...? - ஆஷஸ் 4வது டெஸ்ட் நாளை தொடக்கம்..!
x

Image Courtesy: AFP 

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

மான்செஸ்டர்,

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை 3 போட்டிகள் கொண்ட முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

பர்மிங்காமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், லார்ட்சில் நடந்த 2-வது போட்டியில் 43 ரன் வித்தியாசத்திலும் வெற்றியை ருசித்தது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை (19-ந்தேதி) தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும் என்பதால் கடந்த டெஸ்டை போலவே இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாட முயற்சிக்கும். இந்த டெஸ்டுக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. இதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.



Next Story