உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பை: காலிறுதிக்கு முன்னேறினார் அர்ச்சனா காமத்.

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் அர்ச்சனா,மியு நாகசாகியை 11-13, 6-11, 11-8, 12-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்
கத்தார்
உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பைக்கான போட்டி கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்று வருகிறது . இதில் இந்தியாவின் அர்ச்சனா காமத் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் .
காலிறுதி போட்டியில் அர்ச்சனா ஜப்பானின் மியு நாகசாகியை எதிர்கொண்டார்.பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் அர்ச்சனா,மியு நாகசாகியை 11-13, 6-11, 11-8, 12-10, 11-8 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-11, 4-11, 10-12 என்ற கணக்கில் பிரேசிலின் புருனா தகாஹஷியிடம் வீழ்ந்தார்.
மற்ற வீரர்,வீராங்கனைகள் அனைவரும் வெளியேறியுள்ளதால் அர்ச்சனா காமத் மட்டுமே இந்தியா சார்பில் உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர கோப்பையில் நீடிக்கும் ஒரே வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story