புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி


புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் ஜெயன்ட்ஸ்  வெற்றி
x

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா,

10-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின.

இதில் 56-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 28-50 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.


Next Story