டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை


டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை
x

மருத்துவக்கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டியில் பெரம்பலூரை சேர்ந்த இரட்டையர்கள் சாதனை படைத்தனர்.

பெரம்பலூர்:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி அளவிலான மருத்துவக்கல்லுாரிகளுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி ஒற்றையர், இரட்டையர் பிரிவில் நடந்தது.

இதில் பெரம்பலூர் ராஜா நகரை சேர்ந்த செல்லப்பிள்ளை-பிரபா தம்பதியின் இரட்டை மகன்களும், சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருபவர்களுமான விஜய், சூர்யா வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் விஜய் முதலிடமும், சூர்யா 2-ம் இடமும், இரட்டையர் பிரிவில் இவர்கள் 2 பேரும் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்று வரும் இரட்டையர்களான விஜய், சூர்யாவுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் அவர்கள் 2024-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கும் ஒலிம்பிக்கில் போட்டியில் பங்கேற்பதற்காக பயிற்சி எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story