சஞ்சய் சிங், பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்; அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும், இல்லையெனில்... - பஜ்ரங் பூனியா


சஞ்சய் சிங், பிரிஜ் பூஷனுக்கு நெருக்கமானவர்; அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும், இல்லையெனில்... - பஜ்ரங் பூனியா
x

முன்னாள் மல்யுத்த வீராங்கனை அனிதா ஷிரோன் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று பஜ்ரங் பூனியா கூறினார்.

புதுடெல்லி,

மல்யுத்த வீரர், வீராங்கனையான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குரை நேற்று சந்தித்தனர். அப்போது தங்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி பிரிஜ் பூஷன் ஷரண் சிங்குக்கு நெருக்கமானவர்கள் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். பின்னர் பேட்டியளித்த பஜ்ரங் பூனியா கூறியதாவது:-

பிரிஜ் பூஷனுடன் தொடர்புடைய யாரும் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை விளையாட்டு துறை மந்திரிக்கு நினைவூட்டினோம். சஞ்சய் சிங் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் போட்டியில் இருந்து விலக வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்வோம் என்று நாங்கள் மத்திய விளையாட்டு மந்திரியிடம் தெரிவித்தோம்.

முன்னாள் மல்யுத்த வீராங்கனை அனிதா ஷிரோன் போட்டியிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நாட்டுக்காக பதக்கத்தை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை குறைந்தபட்சம் அறிந்த சில முன்னாள் வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாக பொறுப்புக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அனிதா ஷிரோன் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர். அவர் மல்யுத்த வீரர்களின் கோரிக்கையை புரிந்து கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story