சென்னையில் 25-ந் தேதி பெண்களுக்கான தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி
பெண்கள் தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
சென்னை,
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய விளையாட்டு ஆணையம் ஆதரவுடன் முதலாவது கேலோ இந்தியா பெண்கள் தடகள லீக் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 25-ந் தேதி நடக்கிறது. இதில் 15, 17, 20, 30, 35, 40, 45, 50, 55-க்கு மேற்பட்ட வயது பிரிவுகளில் பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் சுமார் 600 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுகு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story