தூத்துக்குடி: போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் ஒரே நாளில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 105 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.;

Update:2025-09-21 16:37 IST

கடந்த 18.8.2025 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் வீடு புகுந்து திருடிய வழக்கில் சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த டோமினிக் மகன் மரியஅந்தோணி ஆக்னல் (வயது 33), கடந்த 23.8.2025 அன்று முறப்பநாடு காவல் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் கடத்திய வழக்கில் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வெள்ளைப்பாண்டி(29), கடந்த 25.8.2025 முறப்பநாடு காவல் நிலைய கஞ்சா வழக்கில் கலியாவூர் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் மலையரசன்(எ) மகேஷ்(24), கடந்த 20.8.2025 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்மந்தப்பட்ட குலையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த தனராஜ் மகன் ராஜலிங்கம்(26) மற்றும் கூட்டாம்புளி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முத்துராஜ்(23) ஆகியோரையும்,

கடந்த 25.8.2025 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட புதுக்கோட்டை ராஜீவ்நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் பாலமுருகன்(25), கடந்த 25.8.2025 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட T.V.K.நகர் பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் காளியப்பன்(30), கடந்த 25.8.2025 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜமுனியசாமி மகன் சுரேஷ்(34) என்பவர் ஆகிய 8 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேற்சொன்ன காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் நேற்று மேற்சொன்னவாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 105 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்