திருநெல்வேலி: கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீசார் கவனத்திற்கு வந்தது.;
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை, கொலை முயற்சி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை சேர்ந்த பெரியசாமி மகன் மகாராஜன் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கொலை, கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் கவனத்திற்கு வந்தது.
இதனையடுத்து அவர் மகாராஜன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில், மகாராஜன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.