ரஷியா- உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? - இன்று பேச்சுவார்த்தை தொடங்குகிறது

முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.;

Update:2026-01-23 06:55 IST

அபுதாபி,

உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்று விட்டனர்.

போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்தார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன்-அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன், ரஷியா மற்றும் அமெரிக்கா இடையேயான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஜன.23) நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தில் டிரம்பை சந்தித்த பிறகு பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்