அத்திக்கடவு- அவிநாசி திட்டம் பணிகள் பெரும்பாலும்... ... கிளாம்பாக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x
Daily Thanthi 2024-02-13 07:58:54.0

அத்திக்கடவு- அவிநாசி திட்டம் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன - அமைச்சர் துரைமுருகன்

சேலம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்றி மூலமாக நீர் நிரப்பும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த பணி சுணக்கமாக நடைபெற்று வருகிறது, இதை துரிதப்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், வேகமாக, துரிதமாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கேள்வி எழுப்பிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், “60 ஆண்டுகள் கனவுகளாக இருக்கக்கூடிய அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை சுமார் 1,682 கோடி ரூபாயில் அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு, 90 % அ.தி.மு.க. ஆட்சியில் முடிக்கப்பட்டன. மீதமுள்ள 10 % பணிகள் தி.மு.க. பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் முடித்து உள்ளீர்கள். இருந்தாலும், சோதனை ஓட்டம் என்ற முறையில் சில இடங்களில் ஏரிகளுக்கு, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. இதனை அரசு பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “அத்திக்கடவு -அவிநாசி திட்ட பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. குழாய்கள் பதிக்கும் சில இடங்களில் இழப்பீடு தருவதில் பாக்கி இருப்பதால், அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு விரைவில் தொடக்க விழா நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார். 


Next Story