சண்டையில் அமெரிக்கா தலையிடவேண்டாம்.. ஈரான் எச்சரிக்கை


சண்டையில் அமெரிக்கா தலையிடவேண்டாம்.. ஈரான் எச்சரிக்கை
Daily Thanthi 2024-10-02 07:28:19.0
t-max-icont-min-icon

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த சண்டையில் அமெரிக்காவை தலையிடவேண்டாம் என்று ஈரான் கூறியிருக்கிறது. இதுபற்றி வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்ச்சியின் தகவலை மேற்கோள் காட்டி ஈரானிய செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்கா, நேற்று இஸ்ரேல் நோக்கி சென்ற பல ஏவுகணைகளை தடுக்கும் கூட்டு தற்காப்பு முயற்சியில் பங்கு வகித்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கியுள்ளது.

1 More update

Next Story