இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நீடிக்கும் பதற்றம் ... ... 15வது நாளாக தொடரும் போர்: எகிப்தில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்த லாரிகள்...!
x
Daily Thanthi 2023-10-20 23:03:01.0
t-max-icont-min-icon

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நீடிக்கும் பதற்றம்

ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போருக்கு பிறகு காசாவில் உள்ள குடிமக்கள் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என இஸ்ரேல் கூறியுள்ளது.

இதற்கிடையில் லெபனான் எல்லையில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இதன் எதிரொலியாக இஸ்ரேலில் லெபனான் எல்லையோர நகரங்களில் வசித்து வரும் மக்கள் சுமார் 20,000 பேரை இஸ்ரேல் ராணுவம் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளது.

மேற்குகரை மோதலில் 12 பேர் பலி

இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்குகரை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் போலீசார் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் 12 பேரும், இஸ்ரேல் போலீஸ்காரர் ஒருவரும் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே எகிப்து சென்றுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் போரை உடனடியாக நிறுத்தவும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான வழிகளை ஏற்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.

அதேபோல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று எகிப்து சென்றார். அங்கு அவர் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசியை சந்தித்து போர் நிலவரம் குறித்தும், காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 More update

Next Story