எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை: நடவடிக்கை எடுக்க... ... கிளாம்பாக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x
Daily Thanthi 2024-02-13 07:49:55.0

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை: நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் கோரிக்கை

தமிழ்நாடு சட்டசபையின் 2-வது நாள் அமர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் தரப்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அது குறித்து விரைவில் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், “எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.


Next Story