கவர்னர் மீது உரிமை மீறல் கடிதம் பரிசீலனையில்... ... கிளாம்பாக்கம் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் ; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
x
Daily Thanthi 2024-02-13 08:09:30.0

கவர்னர் மீது உரிமை மீறல் கடிதம் பரிசீலனையில் உள்ளது - சபாநாயகர் அப்பாவு

கவர்னர் ஆர்.என்.ரவி மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரி சபாநாயகர் அப்பாவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் எழுதி இருந்தார். இதுதொடர்பான அந்த கடிதத்தில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்... விதி எண். 220ன் படி நேற்று (12.02.2024) கவர்னர் உரையின் போது சட்டசபையில் கவர்னரின் பேச்சு குறித்து அவை நீக்கப்பட்ட சில பகுதிகளை உள்நோக்கத்தோடு சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட கவர்னரின் செயல்பாடுகள் குறித்து அவை உரிமை மீறல் தீர்மானத்தில் விவாதிக்க அனுமதிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் உரிமை மீறல் கடிதம் குறித்து சபாநாயகரிடம் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், “கவர்னர் மீது உரிமை மீறல் கடிதம் பரிசீலனையில் உள்ளது” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


Next Story