மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சந்தானம் தரிசனம்


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சந்தானம் தரிசனம்
x

பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவை,

கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 7-வது படை வீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலுக்கு நடிகர் சந்தானம் வந்தார். அவர், பஞ்சமுக விநாயகர், ஆதி மூலஸ்தானம் சுப்பிரமணிய சுவாமி ஆகிய சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ராஜகோபுரம் வழியாக வெளியே வந்தார். அப்போது அவரை அடையாளம் கண்ட பக்தர்கள் சிலர் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

1 More update

Next Story