திரிஷா,விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


திரிஷா,விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
x
தினத்தந்தி 4 Nov 2025 5:26 PM IST (Updated: 10 Nov 2025 9:48 AM IST)
t-max-icont-min-icon

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னையில் உள்ள திரிஷா, விஷால், இயக்குனர் மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story