திருப்பதியில் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்


திருப்பதியில் இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 25 May 2025 11:03 AM (Updated: 25 May 2025 12:36 PM)
t-max-icont-min-icon

திருப்பதியில் நேற்று 92,216 பேர் தரிசனம் செய்தனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி, சிலாத்தோரணம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட (டைம் ஸ்லாட்) டோக்கன்கள் இல்லாத இலவச தரிசன பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 92,216 பேர் தரிசனம் செய்தனர். 43,346 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.11 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story