மராட்டியம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி


மராட்டியம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
x
தினத்தந்தி 8 Dec 2025 7:58 AM IST (Updated: 8 Dec 2025 1:39 PM IST)
t-max-icont-min-icon

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிப்ஹட் பகுதியை சேர்ந்த 6 பேர் ஒரு காரில் நேற்று மாலை கல்வான் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். கல்வான் அருகே மலைப்பாங்கான ஹர்க் ஹண்ட் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 600 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story