வங்காளதேச வீரர்களையும் ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கக்கூடாது; பாஜக


வங்காளதேச வீரர்களையும் ஐ.பி.எல். விளையாட அனுமதிக்கக்கூடாது; பாஜக
x

வங்காளதேசத்தில் நடப்பவை யாருக்கும் நல்லதல்ல. மனிதத்தன்மையற்றவை என்று பாஜக கூறியுள்ளது.

கொல்கத்தா,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த வங்காளதேச கிரிக்கெட் வீரர் முஸ்தாபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு இ்ந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இ்ந்நிலையில், ேமற்கு வங்காள மாநில பா.ஜனதா முன்னாள் தலைவர் திலீப் கோஷ், பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை வரவேற்கிறோம்.

அதற்கு நன்றி.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல். பந்தயத்தில் விளையாட அனுமதிக்கப்படுவது இல்லை. அதுபோல், வங்காளதேச கிரிக்கெட் வீரர்களும் விளையாட அனுமதிக்கப்படக்கூடாது. கொல்கத்தாவில் இருந்து எழுந்த இக்கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.வங்காளதேசத்தில் நடப்பவை யாருக்கும் நல்லதல்ல. மனிதத்தன்மையற்றவை. அவற்றுக்கு பின்விளைவுகள் உண்டு. அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story