ஜம்மு-காஷ்மீர்: எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களை சந்தித்த ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உதம்பூர் மாவட்டத்திற்கு சென்ற ராஜ்நாத்சிங் எல்லையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுபட்டு வரும் பாதுகாப்புப்படை வீரர்களை சந்தித்தார். இந்த பயணத்தின்போது ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதியும் உடன் இருந்தார்.
இந்த சந்திப்பிற்குப்பின் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், நமது வடக்கு எல்லைப்பகுதியை பாதுகாப்பதில் உதம்பூர் மிகவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கு உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்' என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது உதம்பூர் படைத்தளம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






