மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவனை பூரி கட்டையால் அடித்து கொன்ற மனைவி


மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவனை பூரி கட்டையால் அடித்து கொன்ற மனைவி
x

பெங்களூருவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவனை பூரி கட்டையால் மனைவி அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் சுட்டகுண்டே பால்யா பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (42 வயது). இவரது மனைவி ஸ்ருதி (32 வயது). இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பாஸ்கர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஸ்ருதி பூரி கட்டையால் பாஸ்கரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார்.

ஆனால் போலீசில், அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துவிட்டதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஸ்ருதியிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், கணவரை அடித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story