கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது


கோவாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் - 9 பேர் கைது
x

சம்பந்தப்பட்ட 2 கடைகளில் வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. விளம்பர பலகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பனாஜி,

கோவாவின் வடக்கு பகுதியில் பாகா மற்றும் அர்போரா ஆகிய 2 கடற்கரை கிராங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் உள்ள 2 கடைகளில், எல்.இ.டி. விளம்பர பலகைகளில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்கள் எழுதப்பட்டிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, இதுவரை 9 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அந்த கடைகளில் இருந்த எல்.இ.டி. பலகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட 2 கடைகளின் உரிமையாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அதே சமயம் 2 கடைகளிலும் ஒரே நேரத்தில் எல்.இ.டி. விளம்பர பலகையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் தோன்றியுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story