பைக் மீது பஸ் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி


பைக் மீது பஸ் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
x

பைக் மீது பஸ் மோதிய சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டம் கையா கிராமத்தை சேர்ந்தவர் அவதேஷ் (வயது 42). இவர் இன்று தனது மனைவி மீனா (வயது 40), மகன் ரோகித் (வயது 11), தாயார் கீதா (வயது 53) ஆகியோரை பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள கிராமத்திற்கு சென்றுள்ளார்.

கையா கிராமத்தை கடந்து சென்றபோது சாலையில் வேகமாக வந்த பஸ் முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ரோகித் மட்டும் உயிர் பிழைத்தான். அவதேஷ், அவரது மனைவி மீனா, தாயார் கீதா ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story