மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

கோட்டுச்சேரி அருகே மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
கோட்டுச்சேரி உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜகணபதி தலைமையில் போலீசார் சோனியாகாந்தி நகரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாக்குப்பையுடன் சுற்றித்திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சோனியாகாந்தி நகரை சேர்ந்த அமுல்சிவா (வயது 40), மகாராஜா (34) என்பதும், மாணவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





