கார் மோதி 2 பேர் படுகாயம்


கார் மோதி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Sep 2023 5:52 PM GMT (Updated: 17 Sep 2023 5:53 PM GMT)

கோட்டுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.

கோட்டுச்சேரி

காரைக்கால் நேரு நகரில் தொழிற்கல்வி பயிற்சி மையம் நடத்தி வருபவர் நரேந்திரன் (வயது 32). இவர் தனது நண்பர் மணிகண்டன் (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திரு-பட்டினம் சென்று விட்டு காரைக்காலுக்கு வந்து கொண்டிருந்தார். நிரவியை அடுத்த குயவன்சாவடி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காரைக்கால் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா.


Next Story