கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது
x

காரைக்காலில் கஞ்கா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் காரைக்கால் ரெயில்வே கேட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும் 4 வாலிபர்கள் ஓட்டம்பிடித்தனர். அவர்களை போலீசார் சிறிது தூரம் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை சோதனை செய்தபோது 220 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். அவர்கள் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவானந்தம் (வயது 27), கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த ஹரிஹரன் (22), சூர்யா (23), பாபநாசத்தைச் சேர்ந்த அய்யப்பன் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story