அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு


அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு
x

புதுவையில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் சாவு.

புதுச்சேரி

புதுவை வைத்திக்குப்பம் அன்னை சத்தியா வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 47). அவரது மனைவி உமா (43). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சரவணன் மது குடித்து விட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று சரவணன் அளவுக்கு அதிமாக மதுகுடித்து கருவடிக்குப்பம் சாராயக்கடை அருகே இறந்துகிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story