கத்தியுடன் ரகளை செய்த வாலிபர் கைது


கத்தியுடன் ரகளை செய்த வாலிபர் கைது
x

புதுவையில் கத்தியுடன் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காலாப்பட்டு

புதுச்சேரி-மயிலம் மெயின்ரோட்டில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேதராப்பட்டு போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், திண்டிவனம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story