கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது
புதுவை லாஸ்பேட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை
புதுவை லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர் பாஷா மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிருஷ்ணா நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து சோதனை செய்தபோது, கத்தியை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தபோது, அவர் லாஸ்பேட்டை அசோக்நகர் கவிக்குயில் வீதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story