சட்டசபை நோக்கி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்


சட்டசபை நோக்கி விளையாட்டு வீரர்கள் ஊர்வலம்
x

புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

புதுச்சேரி

கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் விளையாட்டை தனியாக பிரித்து விளையாட்டு துறைக்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள், இலவச பஸ்பாஸ் மற்றும் இலவச இன்சுரன்ஸ் வழங்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை, உதவித்தொகை, உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர்சுதேசி மில்லில் இருந்து புதுவை சட்டசபை நோக்கி இன்று காலை ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலத்திற்கு சங்க தலைவர் வளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், சதீஷ், சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி சென்றனர். மாதா கோவில் அருகே வந்தபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.


Next Story