குடிபோதையில் ரகளை; 2 பேர் கைது


குடிபோதையில் ரகளை; 2 பேர் கைது
x

புதுவையில் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

லாஸ்பேட்டை போலீசார் நேற்று இரவு கிருஷ்ணாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குருசுக்குப்பத்தை சேர்ந்த குருசாமி மூர்த்தி (வயது 63), எழில் நகரை சேர்ந்த சதிஷ்குமார் 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story