குடிபோதையில் ரகளை; 6 பேர் கைது


குடிபோதையில் ரகளை; 6 பேர் கைது
x

புதுவையில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ. சாலையில் குடிபோதையில் ரகளை ஈடுபட்ட சிவக்குமார் (வயது36) என்பவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சிவமுருகன் (35), சக்திவேல் (52), மற்றொரு சக்திவேல் (27), அறிவாளன் (23), ராஜ்குமார் (31) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story