குடிபோதையில் ரகளை; வாலிபர் கைது


குடிபோதையில் ரகளை; வாலிபர் கைது
x

மூலக்குளம் அருகே குடிபோதையில் ரகளை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மூலக்குளம்

மேட்டுப்பாளையம் 4 முனை சந்திப்பு அருகே மதுபோதையில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்து மேட்டுப்பாளையம் போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், மேல்மருவத்தூர் சில்லவட்டம் பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 33) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story