அரசு பஸ் மோதி முதியவர் பலி


அரசு பஸ் மோதி முதியவர் பலி
x

பாகூர் அருகே சாலையை கடக்க முயன்றபோது அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழந்தார்.

பாகூர்

பாகூர் அடுத்த முள்ளோடை சாராயக்கடை அருகே புதுச்சேரி- கடலூர் சாலையை 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story