கல்லூரி மாணவி கடத்தல்


கல்லூரி மாணவி கடத்தல்
x

காரைக்கால் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் தந்தை புகார் தேரிவித்துள்ளார்.

காரைக்கால்,

காரைக்கால் முல்லை நகரைச்சேர்ந்தவர் மகேந்திரன். இவரது 17 வயது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 4-ந்தேதி காலை முதல் மாணவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீசில் அவரது தந்தை புகார் அளித்தார். அந்த புகாரில், உள்ளூரைச்சேர்ந்த வாலிபர்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்கலாம். எனவே, மகளை மீட்டுதரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி மற்றும் வாலிபரை தேடிவருகின்றனர்.


Next Story