நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம்


நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் போராட்டம்
x

புதுவையில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி

புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்ட குழுவினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் விடுப்பு எடுத்து நேற்று முதல் மாதா கோவில் வீதியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நடந்தது. போராட்டத்திற்கு விநாயகவேல் தலைமை தாங்கினார். ஆனந்த கணபதி முன்னிலை வகித்தார். இதில் உதயகுமார், சேகர், வேளாங்கண்ணிதாசன், கணேசன், பாலசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசே நேரடியாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதன் காரணமாக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துக்களில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.


Next Story