ரூ.42 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி


ரூ.42 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணி
x

எல்லைப்பிள்ளைசாவடியில் ரூ.42 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி

புதுவை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட எல்லைப்பிள்ளைசாவடி அய்யனார் கோவில் வீதி ரூ.42 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியில் கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story