புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது



காரைக்காலில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் டூப்ளக்ஸ் வீதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நகர போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட கடையில் போலீசார் சோதனை செய்த போது குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளரான முகமது முஜாஹிதீனை (வயது 23) போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.1,500 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire