கன்னியாகுமரியில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல்: 2 பேர் கைது


கன்னியாகுமரியில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல்: 2 பேர் கைது
x

கன்னியாகுமரியில் 2 வாலிபர்கள், அனுமதியில்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பல நாட்களாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது கொடுத்து பணம் வசூல் செய்த முருகேஷ் (வயது 24) மற்றும் கணேஷ்(22) ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அனுமதி இல்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்து பல நாட்களாக மோசடி செய்தது விசாரணையில் உறுதியானது. அவர்களிடம் போலி ரசீதுகள், வசூலித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீதும் மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

1 More update

Next Story