அரசியலில் மரியாதை, நாகரிகம் தெரியாதவர் அண்ணாமலை - அமைச்சர் கீதாஜீவன் தாக்கு


அரசியலில் மரியாதை, நாகரிகம் தெரியாதவர் அண்ணாமலை - அமைச்சர் கீதாஜீவன் தாக்கு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 Feb 2025 12:39 AM IST (Updated: 22 Feb 2025 12:47 AM IST)
t-max-icont-min-icon

அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த அண்ணாமலை வாய்க்கு வந்த கருத்துகளை கூறி வருகிறார் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.

தூத்துக்குடி

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அரசியலில் தனது இருப்பை வெளிப்படுத்த வாய்க்கு வந்த கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். நேற்று கூட துணை முதல்-அமைச்சரை ஒருமையில் பேசி உள்ளார். அரசியலில் மரியாதை, நாகரிகம் தெரியாதவர், என்ன ஐ.பி.எஸ். படித்தார்? என்று தெரியவில்லை.

அந்த வகையில் தற்போது முதல்-அமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் 'ஹேஷ்டேக்' பதிவு செய்துள்ளார். தனது கட்சியில் தான் முக்கியமானவர் என்பதை கட்சிக்காரர்களுக்கு காண்பிப்பதற்காக இதுபோன்ற செயல்களை அண்ணாமலை செய்கிறார். நிச்சயமாக அதெல்லாம் டிரெண்டிங் ஆகப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story