சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை


சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
x

சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

சென்னை,

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் அதிக அளவு கூடுகின்ற இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக இருக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து, 5 அடுக்கு பாதுகாப்புகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் லக்கேஜில், கத்திரிக்கோல், ரேஷர் பிளேடு, பின்னல் ஊசிகள், கயிறு, இன்சுலேசன் டேப், வாக்கிங் ஸ்டிக், கோடாரி போன்ற கூர்மையான ஆயுதங்கள், ஊறுகாய் பாட்டில் உள்ளிட்டவைகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்த அதே வேளையில் திடீரென மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்னை விமான நிலையத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்தால் எவ்வாறு அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒத்திகை மேற்கொண்டனர். திடீரென நடத்தப்பட்ட ஒத்திகையால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story