திண்டுக்கல்: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை

மதனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை வடமதுரையை சேர்ந்த இளைஞர் மதன் (வயது 22) கடந்த 2024-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மதனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில், சிறுமியை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த மதன் குற்றவாளி என்று இன்று தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளி மதனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
Related Tags :
Next Story






