கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவு பறிமுதல் செய்த கோவில்பட்டி டி.எஸ்.பி.க்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு


கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவு பறிமுதல் செய்த கோவில்பட்டி டி.எஸ்.பி.க்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு
x

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் கடந்த மாதத்தில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி வடபாகம், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களை மாவட்ட எஸ்.பி. சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.

அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக சிப்காட், புதுக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களும், அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக தூத்துக்குடி தென்பாகம், திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேற்சொன்ன 5 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அதன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், மேலும் கோவில்பட்டி உட்கோட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தியும், அதிகளவில் பறிமுதல் செய்தும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் ஆகியோரையும் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

1 More update

Next Story