'திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்' - ஆவணத்தை அன்புமணி வெளியிட்டார்

'திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்' என்ற ஆவணத்தை அன்புமணி வெளியிட்டார்.
'திமுக அரசின் பொய் தொழில் முதலீடுகள்' - ஆவணத்தை அன்புமணி வெளியிட்டார்
Published on

சென்னை,

திமுக ஆட்சியில் இதுவரை ரூ.11.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன் மூலம் 34 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தி.மு.க. ஆட்சியில், தொழில் முதலீடுகள் குறித்த உண்மை நிலை என்ன? என்பதை விளக்கும் வகையில் தி.மு.க. அரசின் தொழில் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான ஆவணத்தை பா.ம.க. தயாரித்திருக்கிறது.

இந்த ஆவணத்தை சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதனை அக்கட்சி நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com