சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னையில் 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை
நாடு முழுவதும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக அவ்வபோது சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்துவரும் தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனைநடத்தி வருகின்றனர்.
சென்னையில் அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்பட 5 இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தை புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Related Tags :
Next Story






